திங்கள், 19 ஏப்ரல், 2010

உலக பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக கையாண்டது

அண்மையில் சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய உலகப் பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக கையாண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற செயலமர்வில் ‘உலக நிதி நெருக்கடியிலிருந்து கற்றுக்கொண்ட அத்தியாயங்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகையிலேயே அஜித் நிவாட் கப்ரால் இவ்வாறு தெர்வித்தார.

கடந்த வருடம் உலகளாவிய ரீதியில் பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நிதி நிறுவனங்களும் சந்தைகளும் பாரிய பின்னடைவைச் சந்தித்ததுடன் சில வங்கிகளும் நிறுவனங்களும் மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பொருளாதார நெருக்கடியைப் பொறுத்தவரையில் உலகின் எந்த மூலையில் பொருளாதார நெருக்கடி ஏற்பாட்டாலும் உடனடியாக உலகளவில் அதன் பாதிப்புகள் பிரதிபலிக்கும். அந்தவகையில் கடந்த வருடம் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியில் இலங்கையும் சிக்கியிருந்தது. ஆனால் அதனை நாம் புத்திசாதுர்யமாக எதிர்கொண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெற்றுள்ளோம்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்குரிய திட்டங்களை நாம் முற்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவித்தோம். அறிவித்த திட்டங்களை அமுல்படுத்தினோம். இதனால் எமக்கு வெற்றிகள் கிடைத்தது. அத்துடன் பொருளாதார பிரச்சினைகளை கையாள்வதற்கு அரசியல் உட்கட்டமைப்பின் ஆதரவும் மிக முக்கியமானது. இலங்கையில் மூன்று தசாப்தகால மோதல்கள் முடிவூக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் வாய்ப்புகள் தற்பொது உள்ளன. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நாம் அபிவிருத்திகாண வேண்டும். கடந்த சில வருடங்களாக இலங்கை சாத்தியமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமெனவூம் திரு அஜித் நிவாட் கப்ரால் தமது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
நன்றி ஜனாதிபதி இணையம்

கருத்துகள் இல்லை: