திங்கள், 26 ஏப்ரல், 2010

உலகின் சிறந்த மழை நீர் முகாமைத்துவம் இலங்கையில்

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
உலகின் மிகச் சிறந்த மழை நீர் முகாமைத்துவ திட்டம் சீனாவிலேயே உள்ளது. இந்த திட்டத்தை இலங்கையிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படு கிறது.
மழை நீரில் 40 சத வீதத்தையே இலங்கை பயன்படுத்துகிறது. 60 சத வீதம் வீணாக்கப்படுவதாக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகிறார். உலகின் மிகச் சிறந்த மழை நீர் முகாமைத்துவ திட்டம் சீனாவில் உள்ளது.
அதனை இலங்கையிலும் அறி முகப்படுத்தவுள்ளோம்.
25 ஏக்கருக்கு மேற்பட்ட வாவிகள் மற்றும் குளங்களே மத்திய அரசுக்கு சொந்தமானவை.
மற்றவை மாகாண சபைகளின் பொறுப்பில் உள்ளன.
எனினும் மாகாண சபைகளின் பொறுப்பில் உள்ள வாவிகளை பொறுப்பாக நட த்திச் செல்ல மாகாண சபைகளிடம் போதிய வளங்களோ நிதியோ இல்லை. இதனால் சிறிய வாவிகள் மற்றும் குளங்களின் அபிவிருத்தி வேலைகள் தாமதமாகின்றன. இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எனவே சிறிய வாவிகள் மற்றும் குளங்களை அபி விருத்தி செய்வதற்கு மாகாண சபைகளுக்கு உதவுவதற்கு நடவடி க்கை எடுக்கப்படும் என்று அமை ச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை: