ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
அரசியலில் கூடுதல் அனுபவம், தகுதி உள்ளவர்களுக்கே அமைச்சர்கள் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் ஜனாதிபதி
புதிய அமைச்சரவையில் 35 முதல் 38 பேர் அமைச்சர்களாகப் பதவிவகிப்பர். நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப் பட்டுள்ளவர்களில் கூடுதல் தகுதி, அனுபவம் மற்றும் திறமையுள்ளவர்களே அமைச் சர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தக வலைத் தெரிவித்துள்ளார். "திவயின' சிங்கள நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இப்படிக் கூறியுள்ளார். சிரேஷ்ட மற்றும் தகுதியானவர்களுக்கே அமைச்சர் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும். அமைச்சர்களை நியமிக்கு முன்னர் சிரேஷ்ட உயர் அரச அதிகாரி களின் கருத்துக்கள் கேட்கப்படும். அந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும் அமைச்சர் நியமனம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் விவகாரங்களில் தேர்ச்சி பெறுவது மிகவும் முதன்மையான அவசியமான தேவை என்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார். அமைச்சர்கள் நியமனத்தின்போது அரசியலில் கூடுதல் அனுபவம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தைக் கேட்டு அதனடிப்படையில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என்றும் ஜனாதிபதி சொன்னார். புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி நாளை ஞாயிற்றுக்கிமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அலுவல்களில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் புதிய எம்பிக்களுக்கு விளக்கவுரை நிகழ்த்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக