செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மட்டு. படுவான்கரை பஸ்சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஹிஸ்புல்லாஹ்

மட்டகளப்பு பஸ் சாலை ஊழியர்களின் வேலை பகிஷ்கரிப்பால் முற்றாகத் நிறுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதி பஸ் சேவைகளை உடனடியாக மீள ஆரம்பிக்குமாறு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம், ஹிஸ்புல்லாஹ் இலங்கை மத்திய போக்குவரத்து சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பஸ் சேவை நிறுத்தத்தையடுத்து படுவான்கரைப் பகுதிகளுக்கான வவுணதீவு, கரவெட்டி, உன்னிச்சை ஆகிய பகுதியின் மக்கள் மட்டகளப்பு நகரில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர்.

போக்குவரத்து வசதியின்றி பிரதான பஸ் நிலையத்தில் பல மணி நேரம் தாம் காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம் அவர்கள் முறையிட்டதையடுத்து, அவர் போக்குவரத்துச் சபைத் தலைவரை கொழும்பில், அவரது தலைமையகத்தில் சந்தித்து, குறித்த பஸ் சேவைகளை உடனடியாக மீள ஆரம்பிக்குமாறு கேட்டுள்ளதாக அரச ஊடகப்பிரிவுத் தெரிவிக்கின்றது.

அதேவேளை, இச்சந்திப்பின் போது மட்டக்களப்பு பஸ் சாலை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை பகிஷ்கரிப்பினை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய போக்குவரத்துச் சபையிடம் அவர் கேட்டுள்ளதாக அரச ஊடகப்பிரிவு மேலும் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை: